தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தையின் அன்பின் முன்னேதாலாட்டுப்பாடும் தாயின் அன்போ தந்தை அன்பின் பின்னே
பெரும்பாலான தந்தைகளுக்கு தங்கள் அன்பை உணர்வுகளை வெளிக்காட்டத் தெரியாது.., அவர்களின் ஒட்டுமொத்த குரலாய் ஒலித்த நா. முத்துக்குமாரின் பாடல்கள் அடுத்த தலைமுறை அப்பாக்களுக்கும் சேர்த்தே ஒலிக்கும்.. ஆழ்ந்த வருத்தங்கள்.
யுவன் சங்கர் ராஜா இசையில் தங்க மீன்கள் படத்துக்காக இவர் எழுதிய ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்… ‘ பாடலுக்கு முதல் தேசிய விருதினை வென்றார்.
அடுத்து ஜிவி பிரகாஷ் இசையில் சைவம் படத்தில் இடம்பெற்ற அழகே அழகே… பாடலுக்காக இரண்டாவது தேசிய விருதினை வென்றார்
தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர் நாமுத்துக்குமார் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.அவருக்கு வயது 41. சிறந்த பாடலாசிரியருக்கான தேசியவிருதினை இரண்டு முறை வென்றவர் கவிஞர்முத்துக்குமார்.
காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் ஜூலை 12, 1975-ம் ஆண்டு பிறந்தவர் நா முத்துக்குமார். காஞ்சிபுரம்பச்சையப்பன் கல்லூரியில் கல்விப் படிப்பை முடித்தவர்,ஆரம்ப நாட்களிலிருந்தே எழுவதில் நாட்டம்கொண்டார். பிரபல இயக்குநர் மறைந்த பாலுமகேந்திராவிடம் நான்கு ஆண்டுகள் உதவிஇயக்குநராகப் பணியாற்றினார்.
இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமானசீமான் மூலம் வீரநடை படத்தில் பாடலாசிரியராகஅறிமுகமானார். அதன் பிறகு ஏராளமான படங்களுக்குபாடல்கள் எழுதினார். தமிழ் சினிமாவின் முன்னணிபாடலாசிரியர்கள் அத்தனைப் பேருடனும்பணியாற்றியவர் நா முத்துக்குமார். இளையராஜா, ஏஆர் ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, ஜிவி பிரகாஷ்குமார்,ஹாரிஸ் ஜெயராஜ் என அத்தனைப் பேருடனும் மிகவும்நட்பாகவும் இணக்கமாகவும் இருந்தவர் நாமுத்துக்குமார். குறிப்பாக யுவன் சங்கர் ராஜா, ஜிவிபிரகாஷுக்கு மிக நெருக்கமான நண்பராகத்திகழ்ந்தார். யுவன் சங்கர் ராஜா இசையில் தங்கமீன்கள் படத்துக்காக இவர் எழுதிய ‘ஆனந்த யாழைமீட்டுகிறாய்… ‘ பாடலுக்கு முதல் தேசிய விருதினைவென்றார்.
அடுத்து ஜிவி பிரகாஷ் இசையில் சைவம் படத்தில்இடம்பெற்ற அழகே அழகே… பாடலுக்காக இரண்டாவதுதேசிய விருதினை வென்றார். தொடர்ந்துபத்தாண்டுகள் தமிழ் சினிமாவின் முதன்மைபாடலாசிரியராகத் திகழ்ந்தார் நா முத்துக்குமார்.சமீபத்தில் அமெரிக்காவுக்குச் சென்றவர், அங்குஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் அமையவிருக்கும்தமிழ் இருக்கைக்கான நிதி திரட்டல் நிகழ்ச்சியில்பங்கேற்று தன் பொறுப்பை நிறைவேற்றினார்.
மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்தமுத்துக்குமார், இன்று மாரடைப்பால் மரணமடைந்தார்.நா முத்துக்குமாருக்கு மனைவியும் இரண்டுகுழந்தைகளும் உள்ளனர்.